பள்ளிவாசல்
(பீ எம் கமால், கடையநல்லூர் )
பள்ளிவாசல்-
பக்திவிவ சாயிகளின்
பாசன பூமியிது !
தொழுவது அங்கே
உழுவது ஆகும் !
கண்ணீர் சிந்தி
தண்ணீர் பாய்ச்சி
கல்பையே விதையாய்
கருத்துடன் ஊன்றி
விவசாயத்தை
இங்கேதான்
விருத்தி செய்கிறோம் !
இம்மையில் செய்யும்
விவசாயத்திற்கு
மறுமையில் தான்
மகசூல் கிடைக்கும் !
பொறுமையுடனே
விவசா யத்தை
பொறுப்புடன் செய்தால்
மறுமையில் அறுவடை
ஆதாயத்தை
அள்ளிக் கொள்ளலாம் !
பள்ளிவாசல்-
பரமனுக்குப் பக்தன்
எழுதுகின்ற
காதல் கடிதம்
இந்த
அஞ்சலகத்தில் தான்
முத்திரை இடப்படுகிறது !
நெற்றியில் விரலால்
தொட்டுப் பார்த்தால்
முத்திரை யின்முக
வரிகள் தெரியும் !
இது
பள்ளிவாசல் மட்டுமல்ல !
பயிலும் பள்ளிக்
கூடமும் இதுதான் !
தலைவனுக்குத்
தலை பணிந்தொழுகும்
தத்துவம் இங்கே
போதிக்கப் படுகிறது !
ஞானம் வேண்டுமென்றால்
போதிமரம் நோக்கிப்
போகவேண்டாம்; இந்தப்
பள்ளி வாசலே
பக்தியை ஊட்டும் !
பக்தியும் புத்தியும்
இந்தப்
பட்டறையில் தான்
கூர்தீட்டப் படுகிறது !
வெறுமை மனது
ஒருமை அடைந்து
பெருமை அடைவது
இந்தப்
பள்ளிகளில் தான் !
ஆதியின் ஜோதியை
அடையாளம் காண்பதற்கு
பள்ளி வாசல்கள்
பயன்படு கின்றன !
பள்ளிவாசல்-
மூமின்களுக்கு
ஐவேளை புகுந்து
வெளிவருகின்ற
அற்புத "ஹிரா"க் குகை !
அங்கசுத்தி எனபது
இங்கே
அகத்தூய்மை; தொழுகை
ஆன்மா குளிக்கும்
அற்புதத் தடாகம் !
குப்பா என்பது
தொப்பி யானால்
மினாராக்கள் இங்கே
அஹதென் றுயரும்
அத்தஹயாத் விரல்கள் !
பள்ளிவாசல்-
சமத்துவம் இங்கே
சமச்சீர் கல்வி !
சகோ தரத்துவம்
சங்கமிக்கும் அருட்கடல் !
பள்ளிவாசல்-
சாத்தான் எரிந்து
சாம்பல் ஆகும்
நெருப்புக் குண்டம் !
நமக்கோ-
சுவனத்துப் பூந்தென்றல்
சுற்றிவரும் பூந்தோட்டம் !
செல்வப் பெருமை
சேரும் கர்வம்
எல்லாம்
இங்கே நாம்
காலெடுத்து வைத்தவுடன்
காலொடிந்து போய்விடும் !
ஆன்ம இருட்டுச்
சுவர்களுக் கிங்கே
வெளிச்ச வெள்ளை
அடிக்கப் படுகிறது !
சமுதாயப் பந்தியில்
பரிமாறப் படுவதற்கு
சகோதரத்துவ விருந்து
இங்கேதான்
சமைக்கப் படுகிறது !
தொழுகை இங்கே
தூங்கா திருக்க
பாங்கின் ஒலிதான்
தாலாட்டா ?
பள்ளி வாசல்தான்
தொட்டிலா ?
ஆன்மக் கன்னிக்கு
ஐவேளை புத்தாடை
அணிவிக்கப் படுவது
இந்த அரங்கில்தான் !
அண்ணல் நபி காலத்தில்
அரசாங்கம் இங்கேதான்
அரங்கேற்றம் ஆனது !
இப்போதோ
அறம் பேணுமிடத்தில்
புறம் பேசப்படுகிறது !
(பீ எம் கமால், கடையநல்லூர் )
பள்ளிவாசல்-
பக்திவிவ சாயிகளின்
பாசன பூமியிது !
தொழுவது அங்கே
உழுவது ஆகும் !
கண்ணீர் சிந்தி
தண்ணீர் பாய்ச்சி
கல்பையே விதையாய்
கருத்துடன் ஊன்றி
விவசாயத்தை
இங்கேதான்
விருத்தி செய்கிறோம் !
இம்மையில் செய்யும்
விவசாயத்திற்கு
மறுமையில் தான்
மகசூல் கிடைக்கும் !
பொறுமையுடனே
விவசா யத்தை
பொறுப்புடன் செய்தால்
மறுமையில் அறுவடை
ஆதாயத்தை
அள்ளிக் கொள்ளலாம் !
பள்ளிவாசல்-
பரமனுக்குப் பக்தன்
எழுதுகின்ற
காதல் கடிதம்
இந்த
அஞ்சலகத்தில் தான்
முத்திரை இடப்படுகிறது !
நெற்றியில் விரலால்
தொட்டுப் பார்த்தால்
முத்திரை யின்முக
வரிகள் தெரியும் !
இது
பள்ளிவாசல் மட்டுமல்ல !
பயிலும் பள்ளிக்
கூடமும் இதுதான் !
தலைவனுக்குத்
தலை பணிந்தொழுகும்
தத்துவம் இங்கே
போதிக்கப் படுகிறது !
ஞானம் வேண்டுமென்றால்
போதிமரம் நோக்கிப்
போகவேண்டாம்; இந்தப்
பள்ளி வாசலே
பக்தியை ஊட்டும் !
பக்தியும் புத்தியும்
இந்தப்
பட்டறையில் தான்
கூர்தீட்டப் படுகிறது !
வெறுமை மனது
ஒருமை அடைந்து
பெருமை அடைவது
இந்தப்
பள்ளிகளில் தான் !
ஆதியின் ஜோதியை
அடையாளம் காண்பதற்கு
பள்ளி வாசல்கள்
பயன்படு கின்றன !
பள்ளிவாசல்-
மூமின்களுக்கு
ஐவேளை புகுந்து
வெளிவருகின்ற
அற்புத "ஹிரா"க் குகை !
அங்கசுத்தி எனபது
இங்கே
அகத்தூய்மை; தொழுகை
ஆன்மா குளிக்கும்
அற்புதத் தடாகம் !
குப்பா என்பது
தொப்பி யானால்
மினாராக்கள் இங்கே
அஹதென் றுயரும்
அத்தஹயாத் விரல்கள் !
பள்ளிவாசல்-
சமத்துவம் இங்கே
சமச்சீர் கல்வி !
சகோ தரத்துவம்
சங்கமிக்கும் அருட்கடல் !
பள்ளிவாசல்-
சாத்தான் எரிந்து
சாம்பல் ஆகும்
நெருப்புக் குண்டம் !
நமக்கோ-
சுவனத்துப் பூந்தென்றல்
சுற்றிவரும் பூந்தோட்டம் !
செல்வப் பெருமை
சேரும் கர்வம்
எல்லாம்
இங்கே நாம்
காலெடுத்து வைத்தவுடன்
காலொடிந்து போய்விடும் !
ஆன்ம இருட்டுச்
சுவர்களுக் கிங்கே
வெளிச்ச வெள்ளை
அடிக்கப் படுகிறது !
சமுதாயப் பந்தியில்
பரிமாறப் படுவதற்கு
சகோதரத்துவ விருந்து
இங்கேதான்
சமைக்கப் படுகிறது !
தொழுகை இங்கே
தூங்கா திருக்க
பாங்கின் ஒலிதான்
தாலாட்டா ?
பள்ளி வாசல்தான்
தொட்டிலா ?
ஆன்மக் கன்னிக்கு
ஐவேளை புத்தாடை
அணிவிக்கப் படுவது
இந்த அரங்கில்தான் !
அண்ணல் நபி காலத்தில்
அரசாங்கம் இங்கேதான்
அரங்கேற்றம் ஆனது !
இப்போதோ
அறம் பேணுமிடத்தில்
புறம் பேசப்படுகிறது !
No comments:
Post a Comment